மதுரை வண்டியூர் கண்மாய் உபரிநீர் கால்வாயில் உடைப்பு - வெள்ளக்காடான வயல்வெளி, குடியிருப்புகள்

4 months ago 24

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய் உபரிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் வயல்வெளிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மதுரை மாவட்டத்திலுள்ள ஓரளவுக்கு பெரிய கண்மாய்களில் ஒன்று வண்டியூர் கண்மாய். ஒரு காலத்தில் சுமார் 687.36 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த இக்கண்மாயில் 107.03 மில்லியன் கனஅடி வரை தண்ணீரை தேக்க முடிந்தது. இதன் மூலம் 963 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பூ மார்க்கெட், நெல் மண்டி நிலையம் போன்றவற்றால் 576.36 ஏக்கராக கண்மாய் சுருங்கிவிட்டது. அத்துடன் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் முழுமையான அளவுக்கு கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

Read Entire Article