மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் உட்பட நாடு முழுவதுமிருந்து கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் தியாகிகள் நினைவு செங்கொடி ஏற்றப்ட்டு, அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மூத்த தலைவர் பிமான் பாசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.