மதுரை: மதுரை மத்திய சிறையில் மோசடி செய்த சிறைத்துறை எஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2021ல் நடந்த முறைகேடு வழக்கில் ஊர்மிளா, வசந்தகண்ணன், தியாகராஜன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை சிறையில் எஸ்பியாக இருந்த ஊர்மிளா தற்போது புதுக்கோட்டை சிறை எஸ்.பியாக உள்ளார். பாளையங்கோட்டை ஏடிஎஸ்பி வசந்த கண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
The post மதுரை சிறையில் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.