மதுரை: மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 2-வது நாளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 900-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. களத்தில் மிரட்டிய காளைகளை வீரர்கள் அடக்கி உற்சாகம் அடைந்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மதுரை கிழக்கு தொகுதி சார்பில், அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-வது நாளாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 7 மணிக்கு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.