மதுபோதையில் பாரில் ரகளை கென்யா நாட்டு பெண்கள் கைது

2 months ago 11

சென்னை: மதுபோதையில் பாரில் பிரச்னை செய்த கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு மது போதையில் வந்த 3 கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் தொந்தரவு கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த 3 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், கென்யா நாட்டை சேர்ந்த விஜினியா (24) அனஸ்தடியா (26), போசியா மூவண்டை (28) ஆகியோர் என்பதும் இவர்கள் மருத்துவ காரணத்திற்காக கடந்த 2 மாதத்திற்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்து தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு போதையில் எழும்பூரில் உள்ள பாருக்கு வந்து உள்ளே அனுமதிக்குமாறு கூறி சுமார் 2 மணி நேரமாக பிரச்னை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post மதுபோதையில் பாரில் ரகளை கென்யா நாட்டு பெண்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article