மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி

8 months ago 52
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலியில் உள்ள அந்த கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு பில்கள் வழங்கப்பட்டன. பில் வழங்குவதன் மூலம் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்கப்படுவதாக எழும் சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும், எந்த ரக மது அதிகம் விற்கப்படுகிறது என்ற தகவல் தங்களுக்கு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
Read Entire Article