மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்குவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் ‘பில்’ வழங்கும் முறை விரைவில் அறிமுகம்

2 months ago 10

பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வாங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ‘பில்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில், இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதிகாரிகளும் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும், இந்த குற்றச்சாட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

Read Entire Article