ஊத்தங்கரை, பிப்.16: ஊத்தங்கரை அருகே பெரியதள்ளபாடி பகுதியில், சிங்காரப்பேட்டை காவல்நிலைய எஸ்ஐ நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரி(62) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post மது விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.