மதவழிபாட்டு தலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

5 months ago 18

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டம் குர்சக் கிராமத்தில் உள்ள மலையில் இந்து மதவழிபாட்டு தலம் உள்ளது.

இதனிடையே, இந்த வழிபாட்டு தலத்திற்கு இளைஞர் கடந்த 17ம் தேதி மாலை இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளார். அப்போது, ஆள் நடமாட்டமில்லாத மாலை நேரத்தில் வழிபாட்டு தலத்தில் மறைந்திருந்த மேலும் சில இளைஞர்கள் அந்த இளைஞருடன் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

18 முதல் 23 வயதிற்கு உள்பட 9 இளைஞர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 இளைஞர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.   

Read Entire Article