மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

4 months ago 15

சென்னை: மத நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்துக்கு தகுதியானவர்கள் வரும் நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் பெயரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஆண்டுதோறும், குடியரசு தின விழாவில் முதல்வரால் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

Read Entire Article