மணப்பாறை தொகுதியை திமுக-வைச் சேர்ந்த மண்ணின் மைந்தருக்கே ஒதுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் இப்போதே திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2011-க்கு முன்பு வரை மணப்பாறை நகராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதியுடன் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின் போது, மருங்காபுரி தொகுதி கலைக்கப்பட்டு மணப்பாறை புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையினர் ஓட்டுகள் கணிசமாக இருந்தும் 2011-ல் முதல் தேர்தலில் மணப்பாறை தொகுதியை அதிமுக-வே கைப்பற்றியது. அடுத்து வந்த தேர்தலிலும் அதிமுக எம்எல்ஏ-வான சந்திரசேகரே மீண்டும் போட்டியிட்டு வாகை சூடினார். 2021-லும் அவரே மீண்டும் போட்டியிட்டார். ஆனால், பெயர் கெட்டுக் கிடந்ததால் ஹாட்ரிக் வெற்றியை அவரால் பெறமுடியவில்லை.