மண்டபம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழா

1 month ago 10

மண்டபம், மார்ச் 22: மண்டபம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் 59வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் 59வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மண்டபம் வட்டார கல்வி அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, மேற்பார்வையாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் பயிற்றுனர்கள் முருகன், தினேஷ், பாலமுருகன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் நிகழ்ச்சிகளை ஆசிரியை நாக சக்தி தொகுத்து வழங்கினார். ஆசிரியயை உமா மகேஸ்வரி நன்றி உரையாற்றினார்.

The post மண்டபம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article