ஓசூர், பிப்.13: ஓசூர் அருகே மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எஸ்.முதுகானப்பள்ளி, அந்திவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற இரண்டு டிப்பர் லாரிகளில் சோதனை செய்தனர். அதில், ஒரு லாரியில் 4 யூனிட் மண், மற்றொரு லாரியில் ஜல்லி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. பின்னர், அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் பற்றியும் எங்கிருந்து மண், ஜல்லி கற்கள் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மண், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.