கிருஷ்ணகிரி, ஜன.25: கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி மற்றும் வருவாய்த்துறையினர், கிருஷ்ணகிரி அணை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அருகே பொக்லைன் மூலம் கும்பல் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தது. அந்த கும்பல் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதையடுத்து அங்கிருந்த பொக்லைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பொக்லைனில் மூன்று செல்போன்களும் இருந்தது. அந்த செல்போன்கள் மற்றும் பொக்லைனை, டேம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த செல்போன்கள் யாருடையது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மண் அள்ளி கடத்திய கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.