மணவாளக்குறிச்சி அருகே கடற்கரையில் வாலிபர் சடலம்

1 day ago 3

குளச்சல், மே 29: மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் டீசர்ட் அணிந்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் , குளச்சல் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மரைன் போலீஸ் எஸ்.ஐ. சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மரைன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post மணவாளக்குறிச்சி அருகே கடற்கரையில் வாலிபர் சடலம் appeared first on Dinakaran.

Read Entire Article