மஞ்சக்கொல்லை விவகாரம்: பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக திருமாவளவன் சாடல்

2 months ago 10

கடலூர்: “வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென த.வா.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று மஞ்சக்கொல்லை சிறுத்தைகள் இரு சமூகங்களுக்கான நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

Read Entire Article