திருச்சி, பிப்.11:திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். இதில் சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி, புதிய குடிநீர் இணைப்பு கோருதல், கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, குப்பை அள்ளுவதிலுள்ள தடை, தாமதங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு மனுக்களை பொதுமக்கள் மேயரிடம் அளித்தனர்.
அவற்றை பெற்றுக்கொண்ட மேயர், மனுக்கள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநகர கமிஷனர் சரவணன், மண்டத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி, நகரப் பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் விஜய்சந்திரன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள், உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: மேயர் கோரிக்கை மனு பெற்றார் appeared first on Dinakaran.