மக்களைத் தேடி பயணத்தின் 11வது நாள்: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, சிட்கோ நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு

4 months ago 11

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்களைத் தேடி பயணம், 11வது நாள் பயணமாக இன்று (20.01.2025) சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, 94-வது வார்டு, சிட்கோ நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, சிட்கோ நகர், 5வது தெருவில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடத்தையும், 4வது தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தையும், அப்பகுதியில் நடைபெற்று வரும் கண்ணாடி பாலத்தின் முன்னேற்றப் பணிகளையும், சிட்கோ நகர் ஏரிக்கரையின் படகு சவாரி பணிகளையும் மற்றும் அப்பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், மண்டலக் குழுத்தலைவர் கூ.பீ.ஜெயின், மாநகராட்சி செயற்பொறியாளர் பத்மநாபன், சென்னை குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் அப்துல் பாருக், பகுதி கழக செயலாளர் வே.வாசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வானவில் விஜய், பொதுக்குழு உறுப்பினர் சாவித்திரி வீரராகவன், மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன், மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மக்களைத் தேடி பயணத்தின் 11வது நாள்: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, சிட்கோ நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Read Entire Article