
சென்னை,
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
"மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே முருகன் பெயரில் மாநாடு நடத்துகின்றனர். மாநாட்டின் நோக்கத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருப்போம். தமிழிலும் குடமுழுக்கு என்பது அதற்கான முதல் கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழில்தான் குடமுழுக்கு என்ற நிலை ஒருநாள் வரும்." என்றார்.