கரூர்: மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவை சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற திமுகவினர் பாடுபடவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, "2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிப்பெற இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.