மகாராஷ்டிரா மசூதியில் குண்டு வெடிப்பு: 2 பேர் கைது

2 days ago 5

மும்பை: நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அர்தா மஸ்தா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் மசூதியின் உள்புறம் சிறிது சேதமடைந்தது. அப்போது மசூதியில் யாருமில்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்தது தெரிய வந்தது. மசூதியின் பின்புறம் உள்ளே நுழைந்து ஜெலட்டின் குச்சிகள் வைத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், விஜய் ராமா கவ்ஹானே(22) மற்றும் ராம் அசோக் சாக்டே(24) ஆகியோரை கைது செய்தனர்.

The post மகாராஷ்டிரா மசூதியில் குண்டு வெடிப்பு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article