மகாராஷ்டிர தேர்தல் முடிவு நாடு முழுவதும் கிடைத்த வெற்றிக்கு சமம்: தமிழிசை சவுந்தரராஜன்

3 months ago 15

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அமைப்பு சார்பில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தார். சோகோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்த வாய்ஸ் ஆப் தென்காசி, தற்போது வாய்ஸ் ஆப் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இவர்களது பணி தொடர வேண்டும். ஆளுநர் பதவி என்பது பல்வேறு வசதிகள் கிடைக்கும் பொறுப்பாகும். நான் அதை வேண்டாம் என விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளேன்” என்றார்.

Read Entire Article