மகா கும்பமேளா எதிரொலி; அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

7 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 59 கோடியே 31 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளா எதிரொலியாக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள், அங்கு புனித நீராடிய பின்னர், அயோத்தி ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Read Entire Article