வதோதரா: 5 அணிகள் பங்கேற்றுள்ள 3வது சீசன் மகளிர் ஐபிஎல் தொடர் (டபிள்யூபிஎல்) நேற்று முன்தினம் வதோதராவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த மும்பை 19.1 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் நாட் அவுட்டாக 80 ரன் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன் அடித்தார்.
பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன் விளாசினார். நிகி பிரசாத் 35,சாரா பிரைஸ் 21 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்தில் 8 ரன் எடுக்க 5வது பந்தில் நிகி பிரசாத் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட பரபரப்பானது. அந்த பந்தில் அருந்ததி ரெட்டி 2ரன் எடுத்தார். 20ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த டெல்லி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நிகி பிரசாத் ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-உ.பி.வாரியர்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வி அடைந்த குஜராத் இன்று வெற்றிகணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
The post மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத்-உ.பி.வாரியர்ஸ் இன்று மோதல் appeared first on Dinakaran.