‘மகளிர் உரிமைத் தொகையால் ஓய்வூதியத்தை மறுக்கக் கூடாது’ - ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

3 hours ago 1

கோவை: “மகளிர் உரிமைத் தொகை பெறுவதால் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கக் கூடாது” என ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிட்டு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடந்த தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியம், சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read Entire Article