மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

5 hours ago 2

சென்னை: “ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும். தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் இதற்கான பணிகள் நடைபெறவுள்ளது” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “கொமதேக உறுப்பினர் ஈஸ்வரன், தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி பேசினார். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்த திட்டத்தின் அடிப்படையிலே, தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

Read Entire Article