மதுரை, ஜெய்ஹிந்த்புரம் முனியாண்டிகோவில் தெருவைச் சேர்ந்தவர் முபினா. இவரது கணவர் சாகுல்ஹமீது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். சாகுல்ஹமீது கத்தாருக்கு வேலைக்கு சென்றதால், தனது 5 வயது மகனை சகோதரி வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். இதனால் மகனை பிரிந்த முபினா, மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மின்விசிறியில் முபினா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தந்தை ஜாபர்உசேன் அளித்த புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், முபீனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
The post மகனைப் பிரிந்த தாய் தற்கொலை appeared first on Dinakaran.