மகனை காணவில்லை என தந்தை புகார்

3 weeks ago 8

 

கரூர், ஜன. 11: பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து வெளியே சென்ற தனது மகன் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என தந்தை அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(53). இவர், டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகன், விஜயகுமார், கடந்த 6ம் தேதி அன்று அவர், பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வெளியே சென்றவர், இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மகனை காணவில்லை என தந்தை புகார் appeared first on Dinakaran.

Read Entire Article