பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர் தான் கையில் வைத்திருந்த பையை தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடினார். போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது 300 கிராம் கஞ்சா, ஒரு கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை துரத்தி பிடிக்க முற்பட்டபோது அந்த நபர் கீழே விழுந்ததில் வலது கை உடைந்தது. அவரை பிடித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டுப்போட்டனர். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் செம்மஞ்சேரி பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டேவிட் பிரசாத் (21) என்பதும், இவர் மீது 6 குற்ற வழக்குகள் இருப்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து டேவிட் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போலீசில் சிக்காமல் இருக்க தப்பி ஓடியபோது கீழே விழுந்து கஞ்சா வியாபாரி கை உடைந்தது appeared first on Dinakaran.