போலீசாருக்கு வார விடுமுறை ஐகோர்ட்டில் வழக்கு

15 hours ago 3

மதுரை: மதுரை, ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல்துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களது குறைகளை தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் எஸ்ஐக்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே காவலர்கள் முதல் எஸ்ஐக்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post போலீசாருக்கு வார விடுமுறை ஐகோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article