போர் பதற்றம்: சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

3 hours ago 3

மும்பை,

சர்வதேச சூழ்நிலை, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணிகள் இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, 140 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 245 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 365 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

185 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 980 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 411 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 334 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

234 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 983 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 151 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 741 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.

Read Entire Article