போதை பொருட்களை கண்டறிய ‘மோப்ப நாய் பிரிவு’ - விரைவில் தொடங்கவுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

4 months ago 13

போதைப் பொருளை கண்டறியும் வகையில் தமிழக காவல் துறையில் 'மோப்ப நாய் பிரிவு’ விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க தமிழக காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதைப் பொருள் தொடர்பாக 2023-ல் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,770 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரை உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொடிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், கடந்தாண்டில் 6,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,731 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்பட்டன.

Read Entire Article