போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

2 months ago 10

போச்சம்பள்ளி, டிச.10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த வாரம் பெஞ்சல் புயலால் தொடர் மழை பெய்தது. இதனால் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதி மக்கள், அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து போச்சம்பள்ளி பகுதியில் வெயில் அடித்த நிலையில், நேற்று அதிகாலை முதல் 8 மணி வரை, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக, சாலையில் எதிரே வந்தவர்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடும் குளிர் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

The post போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article