காட்டுமன்னார்கோவில், பிப். 15: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் விஸ்வா(25). இவர் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்வா வீட்டின் அருகே உள்ள கடைக்கு அந்த சிறுமி வந்தபோது அவரிடம் விஸ்வா ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஸ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது appeared first on Dinakaran.