போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றம்

1 week ago 2

நாமக்கல், பிப்.15: நாமக்கல் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் விளம்பர பேனர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மாநகரில் கடைகள் வைத்திருப்பவர்கள், தங்களது கடையின் விளம்பர பலகைகளை சாலையோரங்களில் வைத்தும், பொருட்களை கடைக்கு வெளியே வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து நாமக்கல் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட், பிரதான சாலை, கடைவீதி, ரங்கர் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அப்போது போக்குவரத்து பிரிவு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

The post போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article