போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சினை: சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் அக்.26-ல் ஆலோசனை

6 months ago 22

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் வரும் அக்.26-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டாக இன்று (அக்.21) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1.25 லட்சம் ஊழியர்கள், ஓய்வுபெற்ற 95 ஆயிரம் ஊழியர்கள் என மொத்தம் 2.25 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள், 25 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது, நிலுவைத்தொகை, ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.

Read Entire Article