திருவொற்றியூர்: திருவொற்றியூர் சக்தி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (45), மணலி போக்குவரத்து தலைமை காவலர். நேற்று மாலை மணலி மார்க்கெட் சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மயங்கி விழுந்தார். சக போக்குவரத்து போலீசார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
The post போக்குவரத்து ஏட்டு மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.