சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணியில் இருப்போரின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் சாலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.