பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை: சண்முகம் சாடல்

2 hours ago 3

கோவை: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், குற்றத்தை மறைக்கவும் அதிமுக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவினர். மக்கள் போராட்டத்தால் மட்டுமே இவ்வழக்கு ஒன்றிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிடவில்லை. இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்திற்குரியது. வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதி இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு குறைவு. அதனை உயர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வழக்கிற்காகப் போராடிய இயக்கங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை: சண்முகம் சாடல் appeared first on Dinakaran.

Read Entire Article