பொதுமக்கள் எதிர்பார்ப்பு பெட்டி, டீக்கடைகளில் 750 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

6 months ago 16

கரூர், டிச. 8: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொரு ட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோத னை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம், அரவக்குறிச்சி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 750 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொதுமக்கள் எதிர்பார்ப்பு பெட்டி, டீக்கடைகளில் 750 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article