பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம்

2 months ago 9

சென்னை: பொதுமக்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அவை நிராகரிக்கப்படுவதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள், துறைகளின் செயலர்களுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: “மாவட்ட ஆட்சியர்களிடம் ‘மக்கள் குறைதீர் நாளில்’ அதிகளவில் கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்குகின்றனர். அதேபோல், அரசுத்துறைகளின் அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையிலான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. ஆன்லைனிலும், நேரடியாகவும் பெறப்படும் இந்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அரசின் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read Entire Article