பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும்

4 months ago 14

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதல்வர் துவக்கி வைத்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று (10ம் தேதி, வெள்ளி) அனைத்து நியாய விலை கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும் appeared first on Dinakaran.

Read Entire Article