பைக்கை திருடிய 2 சிறுவர்கள் கைது வேலூர் அருகே

4 months ago 13

வேலூர், ஜன.5: வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் ஆதித்தன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பெருமுகையில் உள்ள பொறியியல் கல்லூரியின் அருகே பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிதுநேரத்துக்கு பின்னர் ஆதித்தன் வந்தபோது பைக் காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அதில் வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்த 16, 15 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று 2 சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post பைக்கை திருடிய 2 சிறுவர்கள் கைது வேலூர் அருகே appeared first on Dinakaran.

Read Entire Article