பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

6 months ago 19

சென்னை: வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி வணிக நோக்கத்திற்கு பைக் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. மனுவை அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மோட்டார் வாகன விதிகளின்படி நடவடிக்கை எடுக்க கள அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article