போக்குவரத்து கழகங்களை சீரமைக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

2 weeks ago 2

சென்னை: போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் தலைமை வகித்தார்.

சம்மேளன பொருளாளர் சசிகுமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை, பொதுச்செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி, மார்க்சிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஏராளமான தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

Read Entire Article