பேருந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் மூளைச்சாவு

3 hours ago 2

 

திருப்பூர், பிப்.8: திருப்பூர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று முன் தினம் புறப்பட்டது. அந்த பேருந்து செங்கப்பள்ளி அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் சென்ற போது பேருந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவன் குருராஜ் (18) என்பவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இது உறவினர்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. மூளைச்சாவு அடைந்த மாணவனின் உறுப்புகள் தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் மூளைச்சாவு appeared first on Dinakaran.

Read Entire Article