பேரிகை அருகே கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

3 months ago 22

ஓசூர், அக்.9: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் மாஸ்தி சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் சோதனையிட்டதில், 35 டன் எடை கொண்ட பெரிய கிரானைட் கல் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கிரானைட் கல்லுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பேரிகை அருகே கிரானைட் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article