பேரவை தலைவர் பேசவிடாமல் தடுக்கிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு

7 hours ago 2

சென்னை: ‘சட்டப்பேரவையில் என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் பேரவைத் தலைவர் தடுக்கிறார்’ என தவாக தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடியில் மீனவர் நலத்திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லி, மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையில் இப்படி செய்திருக்கிறதே, தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? என்று சில கேள்விகள் குறித்து பேச எழுந்த ஒரு நிமிடத்துக்குள், ‘நன்றி மட்டும்தான் சொல்ல வேண்டும். நீங்கள் பேசக்கூடாது’ என்று இடையில் குறுக்கிட்டு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார்.

Read Entire Article