பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்காதது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

4 months ago 10

சென்னை: பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்​காதது ஏன் என்பது குறித்து சட்​டப்​பேர​வை​யில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்​கமளித்​தார்.

தமிழக சட்டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்​தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்​கு​வதற்காக ரூ.250 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்​கொள்ள​வும் மக்களுக்கு நிவாரணம் வழங்​கியது உள்ளிட்ட செலவினங்​களுக்காக ரூ.2,028 கோடி செலவிடப்​பட்​டது. வெள்ள நிவாரணமாக ரூ.36,000 கோடி வழங்க வேண்​டும் என்று மத்திய அரசிடம் கோரப்​பட்​டது. ஆனால், மத்திய அரசோ மாநில பேரிடர் நிவாரண நிதி​யில் இருந்து ரூ.226 கோடி மட்டுமே வழங்​கியது. ஒருங்​கிணைந்த பள்ளிக் கல்வித்​திட்​டத்​துக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,159 கோடி​யும் வழங்​கப்​பட​வில்லை. அதனால்​தான் பொங்கல் பரிசுத் தொகை வழங்க இயலாத நிலை ஏற்பட்​டது" என்று தெரி​வித்​தார்.

Read Entire Article