வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளைம் பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 110 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் அவர்கள் வைத்திருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முருகுதி அப்பள நாயுடு (42), செம்மல் சந்திய பாபு (32) என்பதும், இவர்கள் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கிவந்து பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The post பெரும்பாக்கம் பகுதியில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.